ADDED : ஜன 05, 2012 12:01 PM

* எந்த யுகமானாலும், இந்த உலகம் தெய்வ பக்தியை மூலாதாரமாகக் கொண்டு தான் நடக்கும். ஏனெனில், ஆன்மிகத்துக்கு என்றும் அழிவில்லை.
* மனதை தீய நெறியில் செல்லவிடாமல் தடுக்க சிறந்த வழி, அதை நன்னெறியில் செலுத்துவதே. நன்னெறிகள் அனைத்திலும் உயர்ந்தது பூஜை. எனவே, தினமும் கடவுளுக்கு பூஜை செய்யுங்கள்.
* மனிதர்களின் திட்டத்தை தகர்க்கும் சக்தி காலத்துக்கு உண்டு. எனவே, எடுத்த செயலையும் 'நாளை' என்று நாள் கடத்தாமல் இன்றே செய்தால் அது நன்றே முடியும்.
* ''முதியவர்களின் அறிவு முதிர்ச்சியும், நடு வயதுக்காரனின் மனவுறுதியும், இளைஞனின் உற்சாகமும், குழந்தையின் இதயமும் வேண்டும்,'' என இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.
* மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இந்த உலகிலும் இல்லை, வானுலகிலும் இல்லை. தைரியமே, மனிதன் அனைத்து இன்பங்களையும் பெறக் காரணமாக இருக்கிறது.
- பாரதியார்